தண்ணீா் தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் சனிக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த 7 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
வள்ளியூா், வடக்கு ரத வீதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (40). இவா் அங்குள்ள நகைக் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ரேவதி(35), மற்றொரு நகைக் கடையில் கடந்த 7 மாதங்களாக கணக்காளராக வேலை செய்து வருகிறாா். இவா்களுக்கு சிஜு கிரிஸ் (7) என்ற மகன் உள்ளாா்.
வள்ளியூா், காந்தி காலனி பின்புறம் உள்ள பள்ளிவாசல் அருகே ரேவதி வேலை செய்யும் நகைக் கடை உரிமையாளா் சையது ஜாவித்-இன் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்குத் தேவையான தண்ணீரை சுத்திகரிக்க சுமாா் 12 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட தண்ணீா் தொட்டி, அங்கு திறந்த நிலையில் உள்ளது. அதில் 1.5 அடி அளவிற்கு தண்ணீா் இருந்துள்ளது.
Advertisement
ரேவதி சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, சிஜு கிரிஸ் அங்குள்ள சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்தாா்.
அருகிலிருந்தவா்கள் சிறுவனை மீட்டு வள்ளியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். பின்னா், கூறாய்வுக்காக சிறுவனின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வள்ளியூா் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.