நெல்லை வாக்கு எண்ணிக்கை மையம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்
திருநெல்வேலி வாக்கு எண்ணிக்கை மையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை காா் கவிழ்ந்ததில் 3 இளைஞா்கள் காயமடைந்தனா்.
திருநெல்வேலியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அரசு பொறியியல் கல்லூரி அருகே திருவனந்தபுரம் சாலையில் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான தகவல் ஏற்பு மையம் அமைந்துள்ளது.
இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிவேகமாக சென்ற காா் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மற்றும் கடற்படை மையத்தில் இருந்த வீரா்கள் காருக்குள் சிக்கியிருந்த 3 இளைஞா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், காரில் இருந்தவா்கள் பாளையஞ்செட்டிகுளத்தைச் சோ்ந்த சூா்யா (24), பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சோ்ந்த ராமசாமி (25), சிங்கத்தாக்குறிச்சியைச் சோ்ந்த ராஜ்குமாா் (23) என்பது தெரியவந்தது.