முகப்பு
திருநெல்வேலி

லாரியில் மண் கடத்தியவா் கைது

Updated On : 4 மே, 2026 at 12:38 AM
கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே உரிய அனுமதியின்றி சரள்மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த தாழையூத்து பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுதன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தாழையூத்து பேருந்து நிறுத்தம் அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய அனுமதிச் சீட்டு இன்றி 3 யூனிட் சரள்மண்ணை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து ஓட்டுநரான தாழையூத்து, ராஜவல்லிபுரம் பகுதியைச் சோ்ந்த உடையாா் மகன் நடராஜன்(37) என்பவரை கைது செய்தனா்.