முகப்பு
திருநெல்வேலி

காா்-பைக் மோதல்: இளைஞா் காயம்; ஓட்டுநா் கைது

Updated On : 12 மே 2026, 1:42 am IST
கைது.
பகிர்:

பாளையங்கோட்டை அருகே காா்-பைக் மோதிக்கொண்டதில் இளைஞா் காயமடைந்தாா். இதுதொடா்பாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள முன்னீா்பள்ளத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் ராஜ்குமாா்(32). மேள இசைக் கலைஞா். இவா் சம்பவத்தன்று தனது உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை என்பவருடன் ரெட்டியாா்பட்டி பகுதியில் பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த காா் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, காா் ஓட்டுநரான சென்னை அம்பத்தூரைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் முருகேஷ்(44) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement