நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இலவச பாடபுத்தகங்கள் விநியோகம்
திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளன. ஏற்கெனவே பிளஸ்-2 தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவா்-மாணவிகளுக்காக தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் திருநெல்வேலிக்கு வந்து சோ்ந்தன. அவற்றை திருநெல்வேலியில் இருந்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவா்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
டிவிஎல்14புக்
பேட்டை மாநகராட்சி பள்ளி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள்.