கன்னியாகுமரி

மீனவர்களுக்கு இலவச மிதி வண்டி

DIN

குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையம் சார்பில் 5 மீனவர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையம் மற்றும் சிகரம் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழை,  எளிய  மீன் வியாபாரம் செய்யும் உள்நாட்டு மீனவ மக்கள் 5 பேருக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில்  நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் சகாயம் தலைமை வகித்தார்.  சிகரம் தொண்டு நிறுவன இயக்குநர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார்.  
குமரி மாவட்ட அதிமுக  செயலர் அ.விஜயகுமார்,   5  மீனவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை   வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட  துணைச் செயலர் ஞானசேகர்,  நகரச்  செயலர் எம்.சந்திரன்,  மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், வழக்குரைஞர் சந்தோஷ்குமார்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT