தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாகர்கோவில், சுமங்கலி திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் பார்வையிட்டார். கண்காட்சியில் தமிழக அரசு செயல்படுத்திய முக்கிய திட்டங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவர் ப.காந்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) நி. சையத்முஹம்மத், கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் ந.சுந்தரராஜ், துணிநூல் கட்டுப்பாடு அலுவலர் மா.புதியராஜ், மாவட்ட கூட்டுறவு நூற்பாலை சங்கத் தலைவர் ச.சகாயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.