கொட்டாரம் வியாபாரிகள் சங்கச் செயற்குழுக் கூட்டம்
கொட்டாரம் அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கொட்டாரம் அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் எட்வர்ட் தலைமை வகித்தார். செயலர் டி.ராமச்சந்திரன் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சங்கத்தின் 25-ஆவது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் சங்க முன்னாள் செயலர் சி.பால்மணி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
மேலும், தமிழக விவசாயிகள் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வியாழக்கிழமை (ஏப்.5) முழுக் கடையடைப்பு நடத்த வேண்டும். கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையை தரமானதாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க நிர்வாகிகள் ஏ.பி.முத்து, கே.சிவராமபிள்ளை, ஆர்.ரவீந்திரன், ஜி.என்.பாலமுருகன், கே.சுகுமாரன், கே.துரைசுவாமி, ஏ.சண்முகம், பி.ஆறுமுகம்பிள்ளை, பி.நாயகம், சி.ரெங்கராஜன், ச.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.