கன்னியாகுமரி

மார்த்தாண்டம் அருகே விபத்தில் தொழிலாளி சாவு

DIN

மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
மார்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரங்கோடு,  காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (45). இவர் சனிக்கிழமை இரவு மார்த்தாண்டத்திலிருந்து வீட்டுக்கு பைக்கில் திரும்பினாராம். பம்மம் பகுதியில் சென்றபோது,  அவ்வழியாக வந்த கார் பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT