மாநில கோகோ போட்டி: வாறுதட்டு பள்ளி மாணவியர் தேர்வு
மாநில அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வாறுதட்டு உயர்நிலைப் பள்ளி மாணவியர் இருவர் தேர்வாகியுள்ளனர்.
மாநில அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வாறுதட்டு உயர்நிலைப் பள்ளி மாணவியர் இருவர் தேர்வாகியுள்ளனர்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு மார் மத்தேயு காவு காட் நினைவு உயர்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவியர் வி. அஸ்வினி, பி. ஜெரி கென்சா ஆகியோர் பங்கேற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகினர். வெற்றிபெற்ற மாணவியரை, தக்கலை மறைமாவட்ட அனைத்துப் பள்ளிகளின் தாளாளர் ஜோன்சிலால், பள்ளி நிர்வாகி ஜோஸ் ஒற்றலாங்கல், பள்ளித் தலைமையாசிரியர் சத்தியதாஸ், உடற்கல்வி ஆசிரியர் என்.எம். பிரேம்ராஜ், பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் விஜயகுமார், கிராம கல்விக் குழு உறுப்பினர் சிவகுமார் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.