கன்னியாகுமரி

நாகர்கோவிலில் ராகவேந்திரா ஆராதனை விழா

DIN

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பெரியதெருவில் ஸ்ரீ ராகவேந்திராவின் 347 ஆவது ஆராதனை விழா  நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, அறக்கட்டளை நிறுவனர் அய்யப்பன் தலைமை வகித்தார். செயலர் சிதம்பரநடராஜன் நூல் அறிமுக உரையாற்றினார்.
இதில், கவிஞர் தமிழ்க்குழவி எழுதிய ஸ்ரீ ராகவேந்திரா பிள்ளைத் தமிழ் நூலை, பாரத ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் அருணகிரி வெளியிட்டார். அதன் முதல்பிரதியை,  விஜெயதா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொதுச்செயலர் டாக்டர் எஸ்.பத்மநாபன்,  விஸ்வ ஹிந்து பரிஷத் ரத்தினசாமி, பாங்க் ஆப் இந்தியா முதுநிலை மேலாளர்கிரண்குமார்  ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
 நிகழ்ச்சியில், தெ.தி.இந்துக் கல்லூரிப் பேராசிரியர் ஜெகதீசன், வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவர் சண்முக சுந்தர்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT