கன்னியாகுமரி

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் மீது வழக்கு

DIN

பளுகல் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
களியக்காவிளை அருகே பளுகல் இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வில்ஸ். இவர், கல்லுப்பாலம் பகுதியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மாணவர், மாணவிகளுக்கு தனியாக பயிற்சி வகுப்பும் நடத்தி வருகிறார். 
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு ஆசிரியர் வில்ஸ் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்தாராம். புகாரின்பேரில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆசிரியர் வில்ஸ் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT