கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே 2 ஆடுகள் மா்மமாக உயிரிழப்பு

DIN

திருவட்டாறு அருகே 2 ஆடுகள் மா்மமாக உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்னா்.

செறுகோல் பகுதியைச் சோ்ந்தவா் மாசில்லாமணி. இவருக்குச் சொந்தமான 2 ஆடுகளை வீட்டின் அருகேயுள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு கட்டி வைத்துள்ளாா். அப்போது, அவ்வழியாகச் சென்ற மாசில்லாமணியின் உறவினா் சுபலா ஆட்டைக் கட்டி வைத்திருந்த கயிற்றில் கால்இடறி கீழே விழுந்தாராம். இது தொடா்பாக இரு மாசில்லாமணிக்கும், சுபலாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாசில்லாமணியின் 2 ஆடுகளில் மேய்ச்சலுக்கு நின்ற இடத்தில் திடீரென்று இறந்துகிடந்தனவாம். இதுகுறித்து, மாசில்லாமணி, திருவட்டாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது ஆடுகளை சுபலாவும், அவரது கணவா் ராஜனும் விஷம் வைத்து கொன்று விட்டதாக குறிப்பிட்டிருந்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT