கன்னியாகுமரி

குமரி அணைப் பகுதிகளில் மிதமான மழை

DIN


கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதி, மலையோரங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இம்மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. எனினும், தொடர்ந்து   மழை பெய்யவில்லை. இதனால், பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் உள்ளது. இதனிடையே, கடந்த 2 நாள்களாக இம்மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. சனிக்கிழமை அணைகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.  களியக்காவிளை பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. கேரளத்தில்  அண்மையில் பருவமழை தொடங்கியதை அடுத்து களியக்காவிளை வட்டாரத்திலும் பரவலாக மழை பெய்தது.  கடந்த சில நாள்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை  களியக்காவிளை மற்றும் மருதங்கோடு, மேல்புறம், குளப்புறம், கோழிவிளை, படந்தாலுமூடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இப்பகுதியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT