கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்: போலீஸார் விசாரணை

DIN

களியக்காவிளை அருகே வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை அருகேயுள்ள செம்மான்விளை பகுதியைச் சேர்ந்தவர் அலோசியஸ். இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவருடைய காரை பக்கத்தில் உள்ள பிரதீப்குமார் வீட்டின் முன் நிறுத்தியிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சப்தம் கேட்டு எழுந்த பிரதீப்குமார் வீட்டினர், உடடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும், கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து அலோசியஸின் மனைவி அஜி அளித்த புகாரின் பேரில், களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, காருக்கு யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தனரா என விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT