கன்னியாகுமரி

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கத்திக் குத்து: 2 இளைஞர்கள் கைது

DIN

நாகர்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநரை கத்தியால் குத்தியதாக 2 பேர்  கைது செய்யப்பட்டனர். 
நாகர்கோவில்,கோட்டாறு  புத்தன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிகுமார் (47). அரசுப் பேருந்து ஓட்டுநர்.  இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் (28), ஜெயக்குமார்(22) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். 
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரவிகுமார், புத்தன்குடியிருப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சதீஷ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் வழிமறித்து, ரவிகுமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினராம். 
இதில்,  பலத்த காயமடைந்த ரவிகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து  கோட்டாறு போலீஸார்  வழக்குப்  பதிந்து  சதீஷ், ஜெயக்குமார் ஆகிய இருவரையும்  செவ்வாய்க்கிழமை கைது  செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT