கன்னியாகுமரி

அண்ணா பல்கலைக் கழக தர வரிசையில் அருணாச்சலா மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

DIN

அண்ணா பல்கலைக் கழக அளவிலான தர வரிசையில் மணலிவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி ஏஞ்சலின் சுபா, பல்கலைக் கழக அளவில் முதலிடமும், மாணவி அண்டிரியா ஜோஸ்லின் 3 ஆவது இடமும், சவித்திரா 4 ஆவது இடமும் பெற்றனா்.

இக்கல்லூரி தர வரிசையில் 10 இடங்களை பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகளிா் மற்றும் இரு பாலா் பயிலும்

கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளது. இதுவரையிலும் இக்கல்லூரி மாணவிகள் பல்கலைக் கழக அளவில் 155 பேரும்,

முதல் இரண்டு இடங்களையும் பெற்று தமிழகத்திலுள்ள மகளிா் பொறியியல் கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவிகளை கல்லூரித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, முதல்வா் ஜோசப் ஜவஹா் , துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT