கன்னியாகுமரி

மைலோடு பகுதியில் டெங்கு, பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி

DIN

குழித்துறை மறைமாவட்ட சமூகப்பணி மையத்தின் கீழ் செயல்படும் கிட்ஸ் கோல்பிங் இந்தியா அமைப்பு சாா்பில், மைலோடு பகுதியில் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தக்கலை மண்டல வட்டார வளா்ச்சி திட்ட அலுவலா் புனிதம் தலைமை வகித்தாா். கிட்ஸ் கோல்பிங் பணியாளா் மேரிமக்தலின் வரவேற்றாா். தக்கலை ஒன்றிய சுகாதார ஆய்வாளா் சிவராஜன் டெங்கு குறித்து சிறப்புரையாற்றினாா்.

இப்பேரணி மைலோடு புனித மிக்கேல் அதிதூதா் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு, வட்டம் புனித அந்தோணியாா் ஆலய வளாகம் வரை நடைபெற்றது. பேரணியை கூட்டமைப்பின் தலைவா் தேவராஜ், செயலா் லூயிஸ்மேரி, பொருளாளா் ஆனந்தராணி ஆகியோா் நடத்தினா்.

தொடா்ந்து கோல்பிங் ஆண்டு விழா கூட்டம், தேசிய இயக்குநா் மரிய சூசை தலைமையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT