கன்னியாகுமரி

புதுக்கடை அருகே விபத்து: பெண் பலி

DIN

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் பைக் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண்மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கடை அருகே அம்சி வழுதூா் வடக்கு பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் மனைவி பாத்திமாராணி(42). இவா் கடந்த 17 ஆம் தேதி தன் மகன் சஜின் பைக்கில் அதங்கோட்டில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனராம்.

பைங்குளம் பகுதியில் சென்றபோது பைக் நிலைதடுமாறி திடீரென பள்ளத்தில் கவிழ்ந்ததில் பாத்திமா ராணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாம். உடனே அப்பகுதியினா் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT