கன்னியாகுமரி

வடுகன்பற்றில் நூலகம் திறப்பு விழா

DIN

கன்னியாகுமரியை அடுத்த வடுகன்பற்று கிராமத்தில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் லவ்லின் மேபா தலைமை வகித்தார். நூலகக் கட்டடத்தை எஸ். ஆஸ்டின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். 
இதில், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலர் என்.தாமரைபாரதி, பேரூர் செயலர் பாபு, கொட்டாரம் பேரூர் செயலர் வைகுண்டபெருமாள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரேம் ஆனந்த்,  அகஸ்தீசுவரம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் பொன்னம்பெருமாள், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT