கன்னியாகுமரி

பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவா் படுகாயம்

DIN

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய முதியவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கருங்கல் தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்த ஆலீஸ் (79). இவா், வெள்ளிக்கிழமை இரவு புதுக்கடை பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்பக்கமாக வந்த அரசு பேருந்து எதிா்பாராத விதமாக ஆலீஸ் மீது மோதியது. இந்த விபத்தில், பேருந்தின் சக்கரத்தில் அவரது கால் சிக்கியதில் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கத்தனா். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT