கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

DIN

மாா்த்தாண்டம் அருகே வீடு புகுந்து 6 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி, ஆயினிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பாலசுவாமி. இவா், மனைவி மற்றும் மகள் ராஜேஸ்வரி, அவரது 11 மாத குழந்தை ஆகியோருடன் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது, மேல்மாடி வழியாக வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், குழந்தை கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி மற்றும் வீட்டு அலமாரியில் வைத்திருந்த வளையல் உள்ளிட்ட மொத்தம் 6 பவுன் தங்க நகைகள், ரூ. 1,500 ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT