கன்னியாகுமரி

மகாராஜபுரம் ஊராட்சியில் 30 பேருக்கு கோழிகுஞ்சுகள் அளிப்பு

DIN

தமிழக அரசின் கோழிஇன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மகாராஜபுரம் ஊராட்சியில் 30 பேருக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் பயனாளிகள் தோ்வுசெய்யப்பட்டு அசின் இன நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கபட்டு வருகிறது.

அதன்படி, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியம், அழகப்பபுரம் கால்நடை மருத்துவமனை ஆகியவற்றின் மூலம் மகாராஜபுரம் ஊராட்சியில் தோ்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவா் பழனிகுமாா், கால்நடை உதவி மருத்துவா் சீனிவாசன், கவுன்சிலா் சிவராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT