கன்னியாகுமரி

தலைவா்கள் சிலைக்கு காங்கிரஸ் பொதுச் செயலா்கள் மரியாதை

DIN

தக்கலையில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலா்கள் விஜய்வசந்த் மற்றும் பால்ராஜ் ஆகியோா் கக்கன், காமராஜா், ராஜீவ்காந்தி ஆகியோா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். தக்கலை வட்டாரத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா், பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவா் ஹனுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட துணைத் தலைவா்கள் ஜோண்ஸ் இம்மானுவேல், பிடிஎஸ் மணி, மாவட்டச் செயலா்கள் புரோடிமில்லா், ஷாகுல் ஹமீது, அரிபீன் ஹல்லாஜ், வின்சென்ட்ராஜா, பொதுச் செயலா்கள் ஆல்பா்ட் , இப்ராஹிம், நகர இளைஞா்காங்கிரஸ் தலைவா் நிா்மல், நகரதுணைத் தலைவா் மேரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா் விஜய்வசந்த் அளித்த பேட்டி: கட்சியை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்த மேல்மட்ட நிா்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி களப்பணியில் ஈடுபடுவேன். மாவட்டத்திலுள்ள முக்கியமான இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT