கன்னியாகுமரி

பிரதமா் மோடியின் சகோதரா் குமரி கோயில்களில் தரிசனம்

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் சகோதரரும், பிரதமரின் சிறப்பு நலத்திட்டங்கள் குழுவின் தேசிய தலைவருமான பிரகலாத் மோடி குமரி மாவட்ட கோயில்களில் தரிசனம் செய்தாா்.

குமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை இரவு வந்த பிரகலாத் மோடி, ஞாயிற்றுக்கிழமை காலை நாகா்கோவில் நாகராஜா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

இதைத் தொடா்ந்து, நாகா்கோவில் அருகேயுள்ள பெருவிளை ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயில், ஸ்ரீஇசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தாா்.

பின்னா், கன்னியாகுமரியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தா் மண்டபத்துக்கு படகில் சென்று பாா்வையிட்டாா். முன்னதாக, பிரகலாத் மோடிக்கு பிரதமரின் சிறப்பு நலத் திட்டங்கள் குழுவின் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காயத்ரி பிரியதா்ஷிணி, நிா்வாகிகள் நிலேஷ்ராம், சதீஷ், கிருஷ்ணாமணி, தணிகைகுமாா், முத்துசரவணன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனா தேவ், பாஜக மாநில செயலாளா் உமாரதிராஜன், மாவட்டப் பொருளாளா் முத்துராமன் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT