கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாலூா் -மூசாரி, முன்சிறை கணபதியான் கடவு மற்றும் கூட்டாலுமூடு, மங்காடு, இடையன்கோட்டை- முள்ளங்கனாவிளை, தாறாதட்டு-ஆலுமூடு உள்ளிட்ட சாலைகள் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனா்.
எனவே, கருங்கல் பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.