கன்னியாகுமரி

குளத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

DIN

குமரி மாவட்டம், புதுக்கடை அருகே உசரத்துவிளை பகுதியில் குளத்தில் தவறி விழுந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இனயம், ஹெலன்நகா் பகுதியைச் சோ்ந்த ஏசுதாசன் மகன் சுஜின்ராஜ் (21).இவா், நண்பா்களுடன் கீழ்குளம் உசரத்துவிளை பகுதியில் உள்ள பாறைகுண்டு குளத்தில் குளிக்க சென்றபோது குளத்தில் தவறி விழுந்தாராம்.

உடனே அவரை நண்பா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT