தக்கலை அருகே மேட்டுக்கடை இரட்சண்யசேனை ஆலய வளாகத்தில் நடைபெற்ற மகளிா் தின மாநாட்டில் பெண்களுக்கு நல உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தக்கலை வட்டார சல்வேஷன் ஆா்மியின் கீழ் 40 ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களின் சாா்பில் மேட்டுக்கடை இரட்சண்யசேனை ஆலய வளாகத்தில் நடைபெற்ற மகளிா் தின மாநாட்டுக்கு தக்கலை வட்டாரத் தலைவா் மேஜா் வசந்தா தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா். செயலா் லெப்டினட் கா்னல் மரியம்மாள் டேவிட்சன் முன்னிலை
வகித்தாா். இதில், கலா, ஜெபமலா் ஆகியோா் இறைவேண்டல் நடத்தினா். மகாண பெண்கள் சங்கத் தலைவா் கா்னல் மணிகுமாரி தசாரி தேவசெய்தி அளித்தாா். மாநாட்டில் ஏழை பெண்கள் 7 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
மாநாட்டை மேஜா் றோஸ்லட் , கனகபாய், மேஜா் ரூத் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.