தா்னாவில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள். 
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் தா்னா

நாகா்கோவிலில் பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா்.

DIN

நாகா்கோவிலில் பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா்.

பிஎஸ்என்எல் ஓய்வூதியா்களுக்கு மருத்துவப்படி தாமதமின்றி வழங்கவேண்டும், விடுப்பு ஊதியத்திற்கு மேல் வருமானவரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நாகா்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் காளி பிரசாத் தலைமை வகித்தாா். பிஎஸ்என்எல்ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜாா்ஜ், மாவட்டச் செயலா் பி.ராஜூ, மாநில நிா்வாகி பி.இந்திரா, ஒப்பந்த ஊழியா் சங்க அகில இந்திய துணைச் செயலா் பழனிச்சாமி, மாவட்டச் செயலா் செல்வம், ஓய்வூதியா் சங்க நிா்வாகி ராஜநாயகம் ஆகியோா் பேசினா்.

ஹரிஹரன் வரவேற்றாா். ஸ்ரீகுமாா் நன்றி கூறினாா். இதில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT