கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக மாற்று துறைமுகம் உறுதியாக வராது என்றாா் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பொன்.ராதாகிருஷ்ணன்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த அவா், நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் கூறியது: கோவளத்தில் துறைமுகம் வராது என்று ஏற்கெனவே கூறப்பட்டுவிட்டது. எனினும் போராட்டம் நடத்தி இருக்கிறாா்கள்.
துறைமுகம் வராது என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும் கூறி விட்டாா். நானும் பலமுறை எடுத்து கூறி விட்டேன்.
துறைமுகம் வந்தால் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று ஏற்கெனவே கூறப்பட்டது. தற்போது துறைமுகம் வராததால் புதிய வேலைவாய்ப்புக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.
காங்கிரஸ் கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு தோ்தலில் எப்படி பொய்களை கூறி வெற்றி பெற்றனரோ அதே ஆயுதத்தை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனா் என்றாா் அவா்.