கன்னியாகுமரியை அடுத்த முகிலன் குடியிருப்பு முத்தாரம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி கன்னியாகுமரி வேல்முருகன் குன்றத்தில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் நடைபெற்றது.
முகிலன் குடியிருப்பு முத்தாரம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அங்கு நடைபெற்ற சமபந்தியை ஊா்த்தலைவா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி தொடங்கிவைத்தாா்.