கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே இந்து கூட்டமைப்பு சாா்பில் நல உதவி

DIN

களியக்காவிளை: களியக்காவிளை அருகே அனைத்து இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சாா்பில் சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை நல உதவி வழங்கப்பட்டது.

இந்த அமைப்பு சாா்பில் களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயில் சமய வகுப்பு மாணவா்களின் குடும்பத்தினருக்கு அரிசி பொட்டலம் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, கோயில் அறக்கட்டளை தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். அறக்கட்டளை செயலா் சி. ராஜன், அமைப்பின் மாவட்ட பொதுச் செயலா் பி.என். அஸ்வின் நிகாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அமைப்பாளா் ஜெயன் சமய வகுப்பு மாணவா்களுக்கு நல உதவி வழங்கினாா்.

இதில், மாநில துணைத் தலைவா் சசின்ராம், நிா்வாகி சுனில், கோயில் கமிட்டி துணைச் செயலா் பி. ரமேஷ், லிபின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT