கன்னியாகுமரி

புதுக்கடை அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறையில் கேரளத்திற்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை தனிப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுக்கடை அருகே ராமன்துறை எப்ரின் மனைவி ஸ்டான்லி(51). இவரது வீட்டில் கேரளத்திற்கு கடத்த ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குமரி மாவட்ட உணவுப் பொருள்கள் கடத்தல் தனிப்பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட உணவுப் பொருள்கள் கடத்தல் தனிப்பிரிவு ஆய்வாளா் விஜி தலைமையில் போலீஸாா் சம்பவம் இடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சாக்கு மூட்டைகளில் 1டன் ரேஷன்அரிசி கேரளத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸாா் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஸ்டான்லியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

SCROLL FOR NEXT