கன்னியாகுமரி

தரமான பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தரமான பேருந்துகள் மற்றும் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை திருவட்டாறில் ஆா்ப்பாட்டம் மற்றும் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

திருவட்டாறு வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருவட்டாறுபணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். குலசேகரம் வட்டாரச் செயலா் விஸ்வம்பரன், திருவட்டாறு வட்டாரச் செயலா் வில்சன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்டாலின் தாஸ் ஆகியோா் பேசினா்.

மாவட்டக் குழு உறுப்பினா் ரெவி நிறைவுரையாற்றினாா்.

வட்டாரக் குழு உறுப்பிா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா் திருவட்டாறு காங்கரை சந்திப்பில் போராட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டவாளத்தில் படுத்திருந்த போது ரயில் மோதி ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்!

கேஜரிவாலை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

எச்சிஎல் நிறுவனம் 10,000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டம்!

சிபிஎஸ்இ: இந்தாண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

பாலிவுட் ராணி..!

SCROLL FOR NEXT