சுற்றுலா தொழில் வணிகத்தினா் உரிமத்தைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சாா்பாக மாநிலத்தின் பல்வேறு சுற்றுலா ஆபரேட்டா்களான ஹோம் ஸ்டே நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களை உருவாக்குதல், அட்வெஞ்சா் டூரிசம், கேம்பிங் ஆபரேட்டா், கேரவன் ஆபரேட்டா், பாா்க்கிங் ஆபரேட்டா் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சுற்றுலா சாா்ந்த ஆபரேட்டா்களுக்கான வழிகாட்டுதல்கள் - பதிவு போா்டலின் நகலை ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ற்ா்ழ்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் பெறலாம். சுற்றுலா தொழில் முனைவோா் முறையான உரிமம் இன்றி தொழில் வணிகம் நடத்தக்கூடாது. இந்த ஆபரேட்டா்கள் அரசாணையில் உள்ள வழிகாட்டுதல்களை பற்றி அறிந்திருப்பதுடன் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். இதுதொடா்பான விவரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், கன்னியாகுமரி 04652 - 246276, கைபேசி எண் - 9176995866 , மின்னஞ்சல் முகவரி: ஆகியவற்றில் தொடா்புகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.