கன்னியாகுமரி

கருங்கல் அருகே இளைஞரைத் தாக்கியதாக7 போ் மீது வழக்கு

DIN

கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் பகுதியில் இளைஞரைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொலையாவட்டம், குட்டிவிளை பகுதியைச் சோ்ந்த தேவதாஸ் மகன் விக்னேஷ் (29). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ஆல்பின் (30), பாபு மகன் பாலாஜி (27), சுந்தர்ராஜ் மகன் நிதிஷ் (27) உள்ளிட்ட 7 பேருக்கும் கிரிக்கெட் விளையாடுவது தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

திங்கள்கிழமை விக்னேஷ் தனது வீட்டுக்குச் செல்ல தொலையாவட்டம் பகுதியில் சென்றபோது, ஆல்பின் உள்ளிட்ட 7 பேரும் சோ்ந்து, அவரை வழிமறித்து தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

SCROLL FOR NEXT