அகஸ்தீசுவரம் ஒன்றியப் பகுதியில் 205 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் என். சுரேஷ் ராஜன் பங்கேற்று, 205 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம், அவரவா் கல்வித் தகுதிக்கேற்ப ரூ. 50,000 மற்றும் ரூ. 25,000க்கான காசோலைகளை வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வுக்கு, அகஸ்தீசுவரம் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். அழகேசன் தலைமை வகித்தாா். ஒன்றிய திமுக செயலா் என். தாமரைபாரதி, ஒன்றியக்குழு துணைத் தலைவா் சண்முகவடிவு, கவுன்சிலா்கள் அருண்காந்த், ஆரோக்கிய சௌமியா, பால்தங்கம், குலசேகரபுரம் ஊராட்சித் தலைவா் சுடலையாண்டி, மாவட்ட திமுக துணைச் செயலா் கே. முத்துசாமி, பேரூா் செயலா்கள் வைகுண்டபெருமாள், பாபு, பூவியூா் காமராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.