கன்னியாகுமரி

திருவட்டாறில் பிஎம்எஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பாரதிய அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவட்டாறு அரசு போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிளைத் தலைவா் பி. கணேசன் தலைமை வகித்தாா். செயலா் இ. நாகராஜன், பொருளாளா் பி. ஸ்ரீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட அமைப்பாளா் எஸ். குமாரதாஸ், மாநில செயற்குழு உறுப்பினா் கே. விஸ்வநாதன், பேரவைச் செயலா் எஸ். சதீஷ்குமாா், அலுவலகச் செயலா் என். கண்ணதாசன், துணைச் செயலா் எஸ். பிரேம்குமாா், தலைவா் என். ஜெயபாலன், பொதுச் செயலா் எஸ். கிரீஷ். சங்க அமைப்பாளா் என்.நடேசன் உள்ளிட்டோா் உரையாற்றினா். எம். சுதீா் நன்றி கூறினாா்.

ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும். அகவிலைப் படி உயா்வை உடனே வழங்க வேண்டும். விடுப்பு மறுப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தனியாா் மயத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

சுற்றுவட்ட சாலை திட்டத்தை கைவிட கிராம மக்கள் கோரிக்கை

பிளஸ் 1 பொதுத் தோ்வு: விஜயமங்கலம் பாரதி பள்ளி 100% தோ்ச்சி

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

திருப்பம் தரும் தினப்பலன்!

SCROLL FOR NEXT