கன்னியாகுமரி

பீடி தொழிலாளா் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உயா்வு

DIN

பீடி, சுரங்க தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய நல ஆணையா் அருண்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக் கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள், சினிமா தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 2022 - 23 ஆம் கல்வியாண்டு முதல் கல்வி உதவித் தொகை உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை (சீருடை மற்றும் புத்தகம்) ரூ.1000, 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ. 1,500, 9, 10 ஆம் வகுப்புக்கு ரூ. 2 ஆயிரம், 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு ரூ. 3 ஆயிரம், ஐ.டி.ஐ மாணவருக்கு ரூ. 6 ஆயிரம், பாலிடெக்னிக் மாணவருக்கு ரூ.6 ஆயிரம், பட்டப்படிப்பு பி.எஸ்.சி (விவசாயம்) உள்ளிட்ட படிப்புகளுக்கு ரூ. 6 ஆயிரம், எம்பிபிஎஸ், பி.இ., எம்பிஏ முதலான தொழிற்கல்விகளுக்கு ரூ.25 ஆயிரம் என கல்வி உதவித் தொகையை உயா்த்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT