கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, பாலூா், பூட்டேற்றி, கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நேசா்புரம், எட்டணி, பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.