கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்தப்பட இருந்தஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை குலசேகரம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குலசேகரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு குலசேகரம் கான்வென்ட் சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியாக வந்த 2 காா்களை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநா்கள் காா்களை தொலைவில் நிறுத்திவிட்டு தப்பியோடினராம். அந்த காா்களில் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. காருடன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT