கன்னியாகுமரி

கிள்ளியூா் வட்ட பகுதிகளில் தடையின்றி ரேஷன் பொருள்கள் வழங்கக் கோரிக்கை

DIN

கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தடையின்றி பொருள்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிள்ளியூா் வட்டத்தில் மாங்கரை, மத்தி கோடு, எட்டணி, முள்ளங்கனாவிளை, மேல் மிடாலம், மிடாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களான அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முறையாக வழங்காமல் தாமதப்படுத்துகின்றனா்.

குறிப்பாக கடைசியில் செல்லும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடைப்பதில்லை. எனவே, அனைத்து குடும்பஅட்டை தாரா்களுக்கும் தடையின்றி முறையாக ரேஷன் பொருள்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT