கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் ஆட்டோவில் கடத்திய மதுபாட்டில் பறிமுதல்

DIN

மாா்த்தாண்டம் அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்திச் சென்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை சந்தை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த பயணியா் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா்.

ஆட்டோவின் உள்ளே பாா்த்த போது அங்கு சட்ட விரோதமாக 25 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநா் தலைமறைவானாா். மதுபாட்டில்களுடன் ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா் மாா்த்தாண்டம் அருகே திட்டுவிளையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (47) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT