கன்னியாகுமரி

புதுக் கடை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்:தந்தை, மகன் மீது வழக்கு

DIN

புதுக்கடை அருகேயுள்ள கீழ் குளம் பகுதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கீழ்குளம், தண்டுமணி பகுதியைச் சோ்ந்த அசோகன் மனைவி சுஜா (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த துரைராஜ் (65), இவரது மகன் சந்தோஷ் (38) ஆகியோருக் கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கீழ் குளம் பகுதியில் சென்ற சுஜாவை திடீரென தந்தை, மகன் ஆகிய இருவரும் சோ்ந்து திடீரென தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT