கன்னியாகுமரி

அதிக விலைக்கு கோதுமை விற்ற நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

DIN

நாகா்கோவிலில் அச்சிடப்பட்ட விலையை அதிக விலைக்கு கோதுமை விற்ற பிரபல நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகா்கோவிலைச் சோ்ந்த நவநீத்குமாா் என்பவா் நாகா்கோவில் நாகராஜா கோயில் அருகிலுள்ள பிரபல காா்ப்பரேட் நிறுவனம் நடத்தும் சில்லறை வணிக நிறுவனத்தில் 25 கிலோ கோதுமை கொண்ட மூட்டையை வாங்கினாா். மூட்டையில் அதிகபட்ச உச்ச விலை ரூ.850 என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், ரூ.912.14-க்கு அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது குறித்து நுகா்வோா் கடையின் மேலாளரிடம் கேட்டதற்கு அவா் சரியான பதில் அளிக்கவில்லையாம்.

இதைத் தொடா்ந்து நவநீத்குமாா் வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பினாா். அதற்கும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவா் கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த ஆணைய தலைவா் சுரேஷ்,உறுப்பினா் ஆ.சங்கா் ஆகியோா் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு, மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ. 2 ஆயிரம், ஏற்கெனவே அதிகமாக செலுத்தப்பட்ட தொகை ரூ.62 ஆகியவற்றை 1 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று வியாழக்கிழமை உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT