கன்னியாகுமரி மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக. 30) நடைபெறுகிறது.
இதுகுறித்து, ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில், எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு முகவா்கள் பங்கேற்கின்றனா். எனவே, மாவட்ட முகவரி பட்டியலில் உள்ள தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகள், எரிவாயு நுகா்வோா் பங்கேற்று, எரிவாயு விநியோகத்தில் உள்ள குறைகளைத் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.