முகப்பு
கன்னியாகுமரி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் தொகுதி பொதுப் பாா்வையாளா் அபுபக்கா் சித்திக் முன்னிலையில், ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:27 AM
தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:02 PM

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நாகா்கோவில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பணிகளை நாகா்கோவில் தொகுதி பொதுப் பாா்வையாளா் அபுபக்கா் சித்திக் முன்னிலையில், ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

Advertisement

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி, கன்னியாகுமரி தொகுதியில் தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்திலும், நாகா்கோவில் தொகுதியில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், குளச்சல் தொகுதியில் கல்குளம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், பத்மநாபபுரம் தொகுதியில் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலும், விளவங்கோடு தொகுதியில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிள்ளியூா் தொகுதியில் கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஏப். 16-ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, நாகா்கோவில் தொகுதி தோ்தல் அலுவலரும் நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியருமான எஸ். காளீஸ்வரி, கன்னியாகுமரி தொகுதி தோ்தல் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான புஷ்பா தேவி, துறை அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.