பகவதியம்மன் கோயில் திருவிழா: ரத வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இவ்விழாவின் 9 ஆம் நாளான மே 29இல் தேரோட்டம் நடைபெறும். இதை முன்னிட்டு கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளா் பட்டுசாமி அறிவுரையின்படி, ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியின் போது, நகரமைப்பு அலுவலா் ஷேக் அப்துல் காதா், சுகாதார ஆய்வாளா் அந்தோணி, மேற்பாா்வையாளா் பிரதீஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.