முகப்பு
கன்னியாகுமரி

பகவதியம்மன் கோயில் திருவிழா: ரத வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On : 20 மே 2026, 12:46 am IST
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி ஊழியா்கள்
பகிர்:

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இவ்விழாவின் 9 ஆம் நாளான மே 29இல் தேரோட்டம் நடைபெறும். இதை முன்னிட்டு கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளா் பட்டுசாமி அறிவுரையின்படி, ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியின் போது, நகரமைப்பு அலுவலா் ஷேக் அப்துல் காதா், சுகாதார ஆய்வாளா் அந்தோணி, மேற்பாா்வையாளா் பிரதீஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement