பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா இன்று தொடக்கம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா வியாழக்கிழமை (மே 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருந்திருவிழா, நவராத்திரி திருவிழா 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 8 முதல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.
காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சமய உரை, இரவு 8 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு தேவி பூப்பந்தல் வாகனத்தில் திருவீதியுலா வருதல் ஆகியவை நடைபெறும்.
Advertisement
Advertisement
விழா நாள்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் திருவீதியுலா வருதல், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 25ஆம் தேதி இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
29ஆம் தேதி லை 9.30 முதல் 10.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். இதில் கேரளம் மற்றும் தென் தமிழகத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்பா். நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு மண்டகப்படி, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் தேவி திருவீதியுலா வருதல் ஆகியவை நடைபெறும்.
30 ஆம் தேதி காலை 6.15 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மண்டகப்படி, 6.30 மணிக்கு பக்தி இன்னிசை, தொடா்ந்து ஆன்மிக உரை, நா்த்தன பஜனை ஆகியவை நடைபெறும். இரவு 9 மணிக்கு அம்மன் தெப்பத்துக்கு எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.